Tuesday, March 1, 2016

[கனடா தமிழ் Canada Tamil] மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

news

மாலை செய்தி Evening News 01/03/2016

♈🅱👉மாலை செய்தி 🙏🌴🌴🌴🌴🌴🌴🙏 ♈🅱லக்னோவில் தென் கொரிய பிரதிநிதிகள்-அகிலேஷ் யாதவ் சந்திப்பு  ♈🅱அஇஅதிமுக அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு  ♈காற்று மாசு ஏற்படுத்தும் 13 சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்  ♈அமளியில்...

View More 4:01 AM 0

தொல்.திருமா உரை -ஆவடி ம.ந.கூ

http://youtu.be/OVlgNFFDIgu https://youtube.com/watch?v=OVlgNFFDIgU மக்கள் நல கூட்டணியின் 3 ஆம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப்பயணம் ஆவடியில் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய உரையில் சில நகைசுவைகள்...- - ..... தேர்வில் மாணவனாக காப்பியடிப்பது வேறு.,ஆனால் அரசியலில் ...

View More 3:49 AM 0

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை...

View More 3:42 AM 0

விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு

வறண்ட பகுதிகளில் அதிகம் மூங்கில் மரங்களை நடும் நண்பர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் எல்லாரும் அவரை விநோதமாக பார்ப்போம், "ஏங்க குடிக்கிறதுக்கே தண்ணீ இல்லாம, அவனவன் கஷ்டப்படுறான்... நீங்க என்னான்னா... மரமா நட்டுக்கிட்டு இருக்கீங்க......

View More 8:41 AM 0

எனக்கு மனிதநேயம்தான் முக்கியம்

'இவருக்கு தேச பக்தி இல்லையா?' என்று பெரியாரைப் பார்த்துக்கேட்டார்கள். பெரியார் சொன்னார். "நான் மனிதனை நேசிக்கிறேன். எனக்கு மனிதநேயம்தான் முக்கியம்!" என்று சொல்லி ஒரே வார்த்தை கேட்டார். "என்ன தேச பக்தி?  எனக்கு பக்கத்து...

View More 8:38 AM 0

கடந்த 2010-ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே தண்டவாளத்தில்  பாறாங்கற்களை வைத்து தொடர்வண்டிகளை கவிழ்க்க சதி நடந்ததாக பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

இதற்கு காரணமான குற்றவாளிகளைத் தேடுவற்காக திருப்பூர் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழக இரயில்வே காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு
அமைக்கப்பட்டது.

மேற்படி சிறப்பு புலனாய்வு குழுவினர் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஊத்துக்குளி வட்டார மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.
விசாரணை மேல்சாதியினர் பக்கமே செல்லாமல் முழுக்க முழுக்க ஊத்துக்குளி வட்டாரத்தில் வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மீதே நடத்தப்பட்டது. விசாரணை என்ற பெயரில் ஆண்கள் அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்தரவதை செய்தது. காலப்போக்கில் காவல்துறையின் விசாரணைக்கு பயந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
ஆண்கள் இரவுகளில் வீடு திரும்பாத அளவிற்கு சித்தரவதை எல்லை மீறிச்சென்றது.
காவல்துறையின் மேற்படி அடக்குமுறைகள் வெளித்தெரியாத அளவிற்கு
நடந்து வந்த நிலையில் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறி தோழர்கள்
காந்தி, பரமேசுவரன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல்துறை அவர்கள் மீது 6 பொய் வழக்குகளைப் புனைந்து சிறையில் அடைத்தது. தொடர்ச்சியாக தோழர்கள் கதிரவன், மணி, மாணிக்கம் ஆகியோர் மீதும்
பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்தது.

காவல்துறை யின் மேற்படி அடக்குமுறை களுக்கு எதிராக சனநாயகப்பூர்வமாக
நடைபெற்ற அத்தனைப்போராட்டங்களையும் காவல்துறை கடுமையாக ஒடுக்கியது. தோழர்கள் காந்தி, பரமேசுவரனுக்கு பிணைக் கிடைத்து அவர்கள் வெளியே வரவிருந்த நிலையில் அவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தினைப் பாய்ச்சி தடுப்புக் காவலில் சிறையில் அடைத்தது.
நீண்ட நெடிய சனநாயகப் போரட்டங்கள், சட்டப்போராட்டங்கள் வழியாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உடைக்கப்பட்டு தோழர்கள் பிணையில் வெளியே வந்தனர்.

2011ம் ஆண்டிலிருந்து மேற்படி வழக்குகளின் விசாரணை கோயம்புத்தூர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் நடைபெற்று வந்த நிலையில் இன்று தோழர்கள் அனைவரும் மேற்படி வழக்குகளில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்.

தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனத்தும் புனையப்பட்டவை என்பதுதான் நாம் ஆரம்பத்திலிருந்து அரசின் மீது வைத்து வந்த குற்றச்சாட்டு.
தற்போது தோழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசின் மீதான மேற்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட காவல்துறையும், தமிழக ரயில்வே காவல்துறையும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு இழைத்த அநீதிக்ககாக
மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

கருப்புப் பணத்தை காட்டுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அதன் மீது 45% வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருப்பது செயல்படுத்த முடியாத திட்டமாகும். சட்டத்திற்குப் புறம்பான வகையில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை முழுவதுமாக பறிமுதல் செய்ய வேண்டுமே தவிர, சலுகை காட்டுவது மறைமுகமாக அதை ஊக்கப்படுத்துவதாகும்.
இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் மூன்றாண்டுகளில் 5 இலட்சம் ஏக்கர் நிலம் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவித்திருப்பது மிகக் குறைந்த பரப்பளவாகும். இந்த நிலப்பரப்பளவின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். குறிப்பிட்ட கால வரையரைக்குள் நிலங்கள் யாவும் இயற்கை வேளாண்மை முறையையே கடைப்பிடிக்க வழிவகுக்கப்பட வேண்டும். 
உலகம் முழுவதும் அணுமின் நிலையங்களை மூடி வரும்போது அதற்கு ரூ.300 கோடி ஒதுக்கியிருப்பதை கைவிட வேண்டும்.
நடுத்தர மக்களுக்கு வருமான வரி விதிப்பில் எவ்விதச் சலுகையும் காட்டப்படாதது கண்டிக்கத்தக்கது. புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிற உற்பத்தி வரி உயர்த்தப்பட்டிருப்பதைப் போல மதுபானங்கள் மீதான உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான சுங்கத் தீர்வை அடியோடு கைவிடப் படவேண்டும்.

ஊடகங்கள் இந்த அறிக்கையை வெளியிடும்படி வேண்டுகிறேன்.

-ஆவல்.கணேசன்-
செய்தித்துறைப்
பொதுச்செலாளர்
தமிழர் தேசிய முன்னணி

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு

சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச்...

View More 5:53 AM 0


--
தமிழ் தேடுப்பொறி மேம்படுத்தப்படுதல் குழு

SEO/SMO Team

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to canadatamil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/canadatamil.
For more options, visit https://groups.google.com/d/optout.

No comments:

Post a Comment