Sunday, May 9, 2010

Chennai IT : அன்னையர் தினம் . . .


அன்னையர் தினம் . . .


People_Children_Mother_and_daughter___Children_012815_.jpg


ஒற்றை வார்த்தையே 
ஒருகாலத்தில் 
உச்சரித்து 
சொல்ல தடுமாறி
உளறிய 
என் நாக்கும் 
இன்றைய நாட்களில் 
தடித்தெழுந்து 
வெளியே 
தடுக்கி விழுந்து 
தாறுமாறாய் 
வெடித்து சிதறிய 
வார்த்தைகளால் 
உன்மனதை 
சுக்குநூறாய் 
உடைக்கின்ற வேளையிலும் 
ஒற்றை சொல்கூட 
உதிர்க்காமல் 
ஊமையாகவே 
இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான 
மரண தண்டனைதான்..!


Istock Mom Holding Baby Paid.jpg


நான் 
கோபப்பட்டு
கடுஞ் சொற்களை 
தொடுத்து பேசியும் 
கண்டதை யெல்லாம்
எடுத்து வீசியும்கூட 
என்மீது 
மட்டுமேன் 
உனக்கான எதிர்ப்புகள் 
துளிகூட இல்லையே..?

உன் துக்கம்
பலவற்றில்
நான் 
பங்குகொள்ளவில்லையே 
நீ கதறி அழுத
பல பொழுதுகளில் 
நான் கண்டுகொள்ளவேயில்லையே
அப்படியிருக்க 
நீ மட்டுமெப்படி 
என் சிறு துளி 
கண்ணீருக்கும்
படபடத்து
ஏன் 
ஒப்பாரி வைக்கிறாய்..?


6454357-lg.jpg


நான் 
வெற்றிபெற்ற
வேளைகளில் 
என்னை மட்டும் 
காரணமாய் சொன்னாய் 
நான் தோல்வியுற்ற 
வேளைகளில் 
வேறு யாரைவது 
தேடிபிடித்து 
அவர்கள்மீதல்லவா 
பழிபோடுகிறாய் 
ஏன் அம்மா..?

உன்னை 
சிரிக்கவைக்க
நான் 
எந்தொரு 
சிறு முயற்சி கூட 
எடுக்க வில்லையே 
ஆனாலும் 
நான் சந்தோசபட்டால் 
உனக்கெப்படி
முகமலர்ந்த சிரிப்பு 
முந்திக்கொண்டு 
வந்துவிடுகிறது..?


36192854.png


ஊருக்கு வரும்போது 
பார்ப்பவனெல்லாம் 
உடம்பு ஏறிவிட்டதென்று 
வினவியதை 
கேட்டுவிட்டு 
வீட்டுக்குள் உள்னுளைந்துடன் 
இப்படி இளைத்துவிட்டாயேயென்ற 
உன் வாய்மொழி கேட்டு
சற்று குழம்பிவிட்டு 
நீயும் பொய் சொல்லுவாயோ 
என்ற சிந்தனையில் 
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும் 
என்னுடல்
தேய்பிறை போல் 
தோன்றுவதன் 
அர்த்தமென்ன 
என் முழுநிலவாய் 
நீ இருப்பதாலா...?


401181839_4535122145.jpg


நீ 
சாப்பிட்டாயா 
என்று கேட்குமுன்னே
சீக்கிரம் வந்து 
சாப்பிட சொல்லி 
தொந்தரவு செய்கிறாயே 
உனக்கு 
பசியென்ற ஒன்றை 
இறைவன் 
கொடுக்கவில்லையா..?

நான் உண்டுவிட்டால் 
உன்பசியும்
மறைந்துவிடுகிறது 
உன் மனதும்
நிறைந்துவிடுகிறது 
இது எந்தொரு 
அறிவியலிலும் 
இந்த உண்மை 
நிரூபிக்கப்பட வில்லையே..!


65208589.png


உன் பாசம் 
என்னவென்பதை 
அறிந்தபோதும்
மழுங்கிப்போன
என் நெஞ்சம் 
உன்னிடம் நேசத்தை 
வெளிக்காட்ட தெரியாமல் 
தொலைந்து கொண்டிருக்கிறதே..!

அம்மாவென்ற 
ஒற்றை வார்த்தையில் 
இவ்வுலகே உள்ளடங்கி 
போய்விட்டதென்ற 
இந்த உண்மையை 
உணர்ந்துவிட்ட 
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு 
தலைவணங்குகிறேன் 
அம்மா..!



Watch this Vairamuthu poem on Mother:

http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk&feature=player_embedded


--அன்புடன்

   விமல் 






--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment